மன்னார்குடியில் சிபிஎம் பயிலரங்கம்
மன்னார்குடி, அக்.3-சிபிஎம் இடைக்குழு உறுப்பினர்களுக்கான பயிலரங்கம் இரண்டு அமர்வுகளாக மன்னார்குடியில் வியாழனன்று நடத்த ப்பட்டது. முற்பகல் பயிலரங்கம் நகரக்குழு செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறு ப்பினர் ஐ.வி. நாகராஜன் முன்னிலை வகித்தார். கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை ஓர் அறிமுகம் என்னும் தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு உரை யாற்றினார். பிற்பகல் பயிலரங்க அமர்விற்கு முத்துப்பேட்டை இடை க்குழு செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமை வகி த்தார். மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இடைக்கமிட்டிகளின் செயல்பாடு என்றும் தலை ப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேக ரன் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.எஸ்.கலியபெருமாள், ஆர்.குமாரராஜா, கே.தமிழ்மணி, கே.என்.முருகானந்தம், கே.கலைமணி மற்றும் திருத்துறைபூண்டி, முத்துப்பேட்டை கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தனியார், பொதுத்துறை வங்கி முகாம்
திருச்சிராப்பள்ளி, செப்.3- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை, சில்லறை கடன், சுய உதவிக்குழு, வாகனக் கடன், வீட்டு க்கடன், கல்வி மற்றும் தனிப்பட்ட நுகர்வோர் கடன் உள்ளிட்ட கடன் வழங்குவதற்காக பொது மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக தனியார் பொதுத்துறை வங்கி முகாம் நடைபெற உள்ளது- மாவட்ட முன்னோடி வங்கி - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேற்பார்வையில் மற்ற உறுப்பினர் வங்கிகளுடன் ஒருங்கி ணைந்து இந்த முகாம், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் 4.10.2019 தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் வங்கி அல்லாத நிதி நிறுவனம், சிறு நிதி நிறுவனம் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனம் பங்கேற்கி ன்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் மறு சீரமைப்பு, ஒரே தவணையில் வராக்கடனை தீர்வு செய்வ தற்கும், நிதியில் சேர்க்கை திட்டத்தில் சிறப்பு கவனம், மொ பைல் வங்கி, வங்கி கணக்கு தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் 4.10.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பங்கே ற்று பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.