திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் ஆத்தூர் கிராமத்தில் 45 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். நன்னிலம் ஒன்றியம் ஆத்தூர் கிராமத்தில் ரஞ்சித்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் 45 குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.