திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் மாற்றுத்திறனாளியை தவறாக பேசியதை கண்டித்து திங்களன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் டி.சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வங்கிக் கிளை மேலாளர் அங்கு இல்லாததால் புதனன்று பேச்சுவார்த்தை நடத்த உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.ஃப