tamilnadu

திருவாரூரில் கட்டுப்பாடு பகுதிகள் அதிகரிப்பு  

திருவாரூர், ஜூலை 18- திருவாரூர் மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 800 கடந்து விட்டது. கடந்த இரண்டொரு நாளாக தொற்றாளர்கள் அதிகரிப்பதால் தடை செய்யப்பட்ட பகுதிகளும் அதிகரித்து வருகிறது. கொர டாச்சேரி ஒன்றியம், அரசவனங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்து வரும் மருந்தாளுனர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இத னால் பவித்ரமாணிக்கம் அரசு ஊழியர் குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதி யாக அறிவிக்கப்பட்டது.  திருவாரூர் நகராட்சி பகுதிகளில், ஜவுளிக்காரத்தெரு, காரைக்காட்டுத் தெரு உள்ளிட்ட பல பகுதிகள் தொற்றா ளர்களின் காரணமாக தடை செய்யப் பட்டுள்ளது. அரசு அனைவருக்கும் பரி சோதனை செய்யும் பட்சத்தில் எண் ணிக்கை அதிகரிக்கக் கூடும். நோயாளி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் வசதி உள்ளதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளிடமிருந்து வரக் கூட தகவல்களும் கவலை அளிக் கக் கூடியதாக உள்ளது.