tamilnadu

img

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 18- பொருளாதார கோரிக் கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் திரு வாருர் மின்பொறியாளர் அலு வலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திட்ட தலைவர் எஸ். சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு மாநிலத் துணைத் தலை வர் எஸ்.ராஜாராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முரு கையன், மாவட்டத் துணைத் தலைவர் ஜி.பழனிவேல், திட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் வி.சுப்ரமணி யன், ஆர்.ராமசாமி, பொரு ளாளர் எஸ்.ஜெயசந்திரன், கோட்ட செயலாளர்கள் ஜி. வீரபாண்டியன், வி.தமிழர சன், கோட்ட தலைவர்கள் ஆர்.முரளிதரன், எஸ்.மோ கனசுந்தரம் உரையாற்றினர்.  தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் கோருபவர்களுக்கு உடனடி யாக தொகை வழங்க வேண்டும் போன்ற கோ ரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.