திருவாரூர், ஜூலை 8- திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகளின் நலனுக்காக வும், பருத்தி கொள்முதல் செய்வதற்காகவும் வேளாண்மை த்துறையின் சார்பில் திருவாரூர் - நாகை புறவழிச்சாலையில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான விவ சாயிகள் இங்கு கூடி தங்கள் விளைவித்த பருத்தியை விற்ப னை செய்கின்றனர். இங்கு வரும் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஓய்வெடுக்க தனிக்கட்டிடம் இயங்கி வந்தது. தற்போது அது முற்றிலுமாக பழுதடைந்து பயன்ப டுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் ஓய்வெடுக்கவும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் இய லாத வகையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் நல்ல குடிநீர் இல்லை. எனவே மிக விரைவாக விற்ப னைக்கூட வளாகத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன ஓய்வறையை கட்டித்தர வேண்டும், கேண்டீன், குடிநீர் வசதி களையும் உருவாக்கித்தர வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரையும், வேளாண்மைத்துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.