tamilnadu

img

பட்டா வழங்கக் கோரி சிபிஎம் பிரச்சாரம்

குடவாசல், மார்ச் 12- கோவில் நிலங்களில் குடியி ருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட கோரி கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடை பெறும் தொடர் முழக்க போரா ட்டத்தை விளக்கி ஊராட்சி கிரா மங்களான வடகண்டம், எட்டி யலூர், அரசவனங்காட்டில் வீடு  வீடாகச் சென்று பிரச்சாரம் நடை பெற்றது. கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி துண்ட றிக்கை கொடுத்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் கே.கோபிராஜ் மற்றும் வட கண்டம் கிளைச் செயலாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;