tamilnadu

img

கொலைவெறி தாக்குதல் நடத்திய ஒளிமதி நடேச தமிழார்வனை கைது செய்க! மன்னார்குடி டி.எஸ்.பி.யிடம் முறையீடு

மன்னார்குடி, ஜூலை 25-  நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நடை பெறும் சமூக விரோத செயல்களை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பொறுத்துக்கொள்ள முடி யாத சமூக விரோத கும்பல் நடேச தமி ழார்வன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மீதும் ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி, விவசாய தொழிலாளர்கள் சங்க த்தின் தலைவர் சுந்தரமூர்த்தி, மாதர் சங்க த்தைச் சார்ந்த சித்ரா உள்ளிட்டோர் மீதும் கொ லைவெறி தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்கு உள்ளான இவர்கள்  தற்போது மன்னார்குடி அரசு மருத்துவமனை யில் உள்ளனர். நீடாமங்கலம் காவல்துறையி னர் இந்த சமூக விரோத கும்பலின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இப்பகுதியில் வன்செ யல்களிலும் அச்சுறுத்தல்களும் ஈடுபட்டுவ ரும் நடேச தமிழார்வனை குண்டர் சட்டத்தின்  கீழ் கைது செய்திட வலியுறுத்தியும் மன்னா ர்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பி.இளஞ்செழியனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகர செயலாளர் கே. பிச்சைகண்ணு உள்ளிட்டோர் காவல் துணை  கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர்.

;