மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்று தற்போது பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் எஸ் பாரதி தலைமை வகித்தார். தற்போது பயிற்சி பெற்று வரும் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு உதவிகள் செய்தல், அவர்கள் இந்திய ஆட்சிப் பணி மற்றும் ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சிகள் மற்றும் உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைக்காக இச்சங்கம் துவக்கப்பட்டுள்ளது. தேசிய மாணவர் படையின் முன்னாள் பயிற்சி அதிகாரிகள் சோமசுந்தரம் ஜி இருளப்பன் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் எஸ்.சுரேஷ் சங்கத்தின் தலைவராகவும், நூலகர் பி செந்தில்குமார் துணைத் தலைவராகவும் தாமஸ் கிருபாகர பாண்டியன் செயலாளராகவும் கருணாநிதி இணைச் செயலாளராகவும் ஆசிரியர் எஸ் அன்பரசு தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள், கல்லூரி முதல்வர் சோ ரவி மற்றும் தற்போதைய என்சிசி படை அதிகாரி எஸ் ராஜன் ஆகியோரை சந்தித்து பேசினர். வரும் கல்வியாண்டில் கல்லூரிக்கு வருகை தர இருக்கும் தேசிய தர நிர்ணய குழு முன்பாக முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் முன்னாள் தேசிய மாணவர் படை மாணவர்கள் சங்கம் சார்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆசிரியர் ஜே வாசுதேவன் முன்னதாக வரவேற்றார். தேசிய மேல்நிலைப்பள்ளி என்சிசி அதிகாரி எஸ் திவாகர் நன்றி கூறினார்.