திருத்துறைப்பூண்டி, ஜூலை 29- திருவாரூர் மாவட்ட சிஐடியு 8வது மாநாடு ஞாயிறன்று திருத்துறைப பூண்டியில் நடைபெற்றது. மாநாட் டிற்கு மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் பி.என்.லெனின் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் டி.முருகையன் வேலை அறிக் கையினை வைத்தார். மாவட்டப் பொரு ளாளர் எம்.பி.கே.பாண்டியன் வரவு- செலவு அறிக்கையை வாசித்தார். வி.ச மாவட்டச் செயலாளர் வி.எஸ். கலியபெருமாள், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரராஜா வாழ்த்தி பேசினார். மாநிலச் செயலாளர் ஆர். மோகன் புதிய நிர்வாகிகளை அறிவித்து சிறப்புரையாற்றினார். வரவேற்புக்குழு பொருளாளர் ஏ.நபி நன்றியுரை கூறி னார். புதிய தலைவராக இரா.மாலதி, செயலாளராக டி.முருகையன், பொரு ளாளராக எம்.பி.கே.பாண்டியன் உள் ளிட்ட 50 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்த ரம் செய்து வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காவிரி டெல்டாவை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக பாதுகாக்க வேண்டும். டாஸ்மாக் கடை ஆய்வின் போது ஊழியர்களை பாரபட்சமின்றி நடத்திட வேண்டும்.ஆய்வை கைவிட வேண்டும். நகராட்சி, பேரூராட்களில் கூடுதல் மக்கள் தொகைகேற்ப ஊழி யர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.