tamilnadu

ஆட்டோ தொழிலாளர் சங்க கிளை அமைப்பு

 குடவாசல், அக்.8- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஆவூ ரில் சிஐடியு சங்கத்தின் ஆட்டோ தொழிலாளர் அமைப்பு சார்பாக புதிய கிளை அமைக்கப்பட்டது. வலங்கைமான் ஒன்றியம் ஆவூர் கடைவீதியில் சிஐடியு சங்கத்தின் புதிய ஆட்டோ தொழிலாளர் கிளை நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன் தலைமை வகித்தார். சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.முருகையன் சங்க கொடியை ஏற்றி வைத்து வரவேற்புரையாற்றினார்.  சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பெயர் பலகையை ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.கே.எம்.ஹனிபா திறந்து வைத்து பேசினார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனி வேல், சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஒன்.மணி, சங்கத்தின் சட்டச் ஆலோசகரும் வழக்கறிஞருமான கதாக.அரசு தாயுமானவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன், வலங்கை மான் ஒன்றியச் செயலாளர் ஆர்.இராதா உள்ளிட்டோர் மற்றும் நீடா மங்கலம், வலங்கைமான், ஆவூர் சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆவூர் ஆட்டோ சங்க கிளைக்கு தலைவராக சி.இளையராஜா, செயலாளர் சி. சுரேஷ்குமார், பொருளாளராக பி.பார்த்தசாரதி ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். நிறைவாக ஆவூர் கிளைச் செயலாளர் இளை யராஜா நன்றி கூறினார்.

;