திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அந்தகுடி தோப்புபில் பகுதியில் உள்ள வீட்டில் பழுது பார்த்துக்கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் சதோதரகள் இளவரசன், இளையராஜா மற்றும் உறவினர் பாரி ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து பேரளம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.