tamilnadu

இந்தியன் வங்கியின் 114 ஆம் ஆண்டு நிறுவன தின விழா

மன்னார்குடி, ஆக.16- இந்தியன் வங்கியின் கும்பகோணம் மண்டலம் 114  வருட பாரம்பரியமிக்க வங்கி. வங்கிப் பணிகள் மட்டுமல்லாது  சமுதாயப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. இந்தியன் வங்கியின் கும்பகோணம் மண்டலம் 96 கிளை களுடன் செயல்பட்டு வருகிறது. அதன் மண்டல மேலாளர் ராஜேஸ்வரரெட்டி மற்றும் துணை மண்டல மேலாளர் மோகன் ஆகியோரின் சீரிய பணியில் 10,500 கோடி மொத்த வணிகத்துடன் இயங்கி வருகிறது. கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வங்கியின் நிறு வன தினத்தை முன்னிட்டும், சுதந்திர தினத்தை முன்னி ட்டும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் முகக்கவ சம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக  கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமியிடம் முகக் கவ சங்கள் அடங்கிய பார்சலை வங்கி மண்டல மேலாளர் வழங்கி னார். நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் ராஜேஸ்வரரெட்டி மற்றும்  துணை மண்டல மேலாளர் மோகன், மெயின் வங்கி முதன்மை  மேலாளர் ராதாகிருஷ்ணன், மண்டல அலுவலக முதன்மை  மேலாளர் ஆ.இராசா, மக்கள் தொடர்பு அலுவலர் பிரசாந்த்,  சமுதாய ஒருங்கிணைப்பாளர் ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.