tamilnadu

img

தார்சாலை அமைக்கக் கோரி பாய்விரித்து உறங்கும் போராட்டம்

திருவள்ளூர், டிச.12- ஆவாஜிப்பேட்டை வேண்ரான் குளம், புதிய பாலம் அருகே தார்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘பாய்விரித்து உறங்கும்’ நூதனப்போரா ட்டம் வியாழனன்று (டிச.12) நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் முதல் சீத்தஞ்சேரி வரை நெடுஞ்சாலை த்துறை சார்பில் 16 கிலோ மீட்டர் தூரம் ரூ.50 லட்சம் மதிப்பில் 6 மாதத்திற்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இதில்  14 கிலோ மீட்டர் சாலை வனத்துறைக்கு சொந்தமானது. இந்தச் சாலை பெரியபாளையம், கன்னி கைப்பேர், வெங்கல், கல்பட்டு, மாமண்டூர், ஆவாஜிப்பேட்டை, மெய்யூர் ஆகிய கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.  ஆனால் ஆவாஜிப்பேட்டை வேண்ரான் குளம் புதிய பாலம் அருகில் 200 மீட்டர் தூரம் சாலை அமைக்காமல் விட்டதால் அப்பகுதியின் சாலையில் இரண்டு பக்கத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.  இந்த விபத்தை தடுக்க சாலை அமைக்க வேண்டும் என பல முறை அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆவாஜிப்பேட்டை வேண்ரான் குளம் புதிய பாலம் அருகே சாலை அமைக்க வேண்டும், ஆவா ஜிப்பேட்டைக்கு செல்வதற்கு வழிகாட்டிப் பலகை வைக்க வேண்டும், வனத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் இதற்கு வனத்துறை அதிகாரி கள் அனுமதி அளிக்க வேண்டும்,  சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (டிச.12)  வேண்ரான் குளம் புதிய பாலத்தின் மேல் ‘பாய்விரித்து உறங்கும்’ நூதனப் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் போராட்டத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தார் சாலை அமைத்தனர். மேலும் வழிக்காட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.  இந்தப் போராட்டத்திற்கு ஆவா ஜிப்பேட்டை சிபிஎம் கிளைச் செய லாளர் வி.சோலை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.பாலாஜி, என்.கங்காதரன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஜே.ரமேஷ், டி.குமார், பி.அருள், முன்னணி ஊழியர்கள் சி.ரவிச்சந்திரன், முத்து, சண்முகசுந்தரம், ஆர்.லட்சுமி, எஸ். தாட்சாயிணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.