வெங்காயம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது விபத்து
திருவள்ளூர், டிச. 10- ஆந்திர மாநிலம் தடா பத்ரி பகுதியில் இருந்து திங்களன்று இரவு லாரியில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 10 டன் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்னை கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்தது. திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் டோல்கேட் அருகே அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண்டிரு ந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த வெங்காய மூட்டை கள் சாலையில் சிதறியது. இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜில் லான் மற்றும் உரிமையாளர் மாபாஷா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிய வெங்காயத்தை பொது மக்கள் எடுக்காமல் இருக்க பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பஞ்சமி நிலத்தில் அத்துமீறி உழவு செய்தவர் கைது
திருவள்ளூர், டிச.10- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள செதில்பாக்கம் கிராமத்தில் 32 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதனை அங்குள்ள தலித் மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராடி வருகின்றனர். இந்த நிலத்தின் பிரச்சனை தீரும் வரை யாரும் அங்கு பிரவேசிக்க கூடாது என பொன்னேரி கோட்டாச்சியர் தெரி வித்துள்ளார்.இருந்தும் அதிகாரிகள் இந்த பஞ்சம நிலம் சம்மந்தமாக எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் அமைதி காப்பதால், ஆதிக்க சக்திகள் இதை பொருட்டாக கருத வில்லை. நவம்பர் 27 ஆம்தேதி அன்று பஞ்சமி நிலத்தை ஆதிக்க சாதியினர் மீண்டும் உழவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அத்துமீறி உழவு செய்த ஆதிக்க சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் தலைமையில் கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது டிசம்பர் 10 ஆம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் உறுதி யளித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், பஞ்சமி நிலங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த பொன்னேரி கோட்டாச்சியர் நந்தக்குமார் திடீரென டிசம்பர் 9 ஆம் தேதி காலமானார். இதனால் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகில் உள்ள அமாவாசை ரெட்டி கண்டிகையை சேர்ந்த லட்சுமணன் ரெட்டி என்பவர் செவ்வாயன்று காலை (டிச. 10) உழவு செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளர் எம்.சிவக்குமார், மக்களோடு சென்று தடுத்துள்ளார். பின்னர் செதில்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி மாதர்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்தனர். ‘இனி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன்’ என எழுத்து பூர்வமாக உறுதியளித்ததின் பேரில் லட்சுமணனை காவல்துறையினர் விடுவித்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஆதிக்க சாதியினர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே அதிகாரி கள் மெத்தன போக்கை விட்டுவிட்டு செதில்பாக்கம் பஞ்சமி நிலம் பிரச்சனையை தீர்க்க மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.