திருவள்ளூர், பிப்.11- திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியில் உள்ள கடைகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து திருட்டு சம்பவம் நடை பெற்று வந்தது. இந்நிலையில் செவ்வா யன்று (பிப்.11) காலை அதே பகுதியில் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் பூஜை பொருட்கள் வியா பாரம் செய்யப் படும் கோ பால் என்பவரின் கடையை மர்ம நபர்கள் 2 பேர் உடைத்து கொண்டு இருந்தனர். அதனை அவ்வழியாக நடைபயிற்சிக்கு வந்த வர்கள் பார்த்து சந்தேகம் அடைந்து விசாரித்தனர். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொதுமக்கள் விரட்டிச் சென்று ஒரு நபரை மடக்கிக் பிடித்தனர். பின்னர் அவரை மணவாளநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொள்ளையன், புளியந் தோப்பு பகுதியைச் சேர்ந்த மதன் குமார் என்பதும், தப்பியநபர் வெங்கத்தூர் இருளர் காலனியைச் சேர்ந்த முருகேசன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.