tamilnadu

img

பாதுகாப்பான குடிநீர் கேட்டு அதிகாரி முற்றுகை

திருவள்ளூர், ஜூன் 18-  பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்ச அதிகாரியை மாதர் சங்கத்தினர்  முற்றுகை யிட்டனர். பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவி நகர், சாந்தி நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. இங்கு  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு  கடந்த ஒரு வருடமாக குடிநீர்  தட்டுப்பாடு உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் குடிநீரும்  சேரும், சகதியுமாக வருகிறது. இதனால் இந்த தண்ணீரை குடிக்க முடியா மல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த தண்ணீரை பயன்படுத்திய தால் பலர் பல்வேறு நோய்க ளுக்கு ஆளாகியுள்ளனர்.  இந்தப் பிரச்சனை குறித்து அப்பகுதி மக்கள் பல முறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை.  இந்நிலையில் சென்னீ ர்குப்பம் வந்த பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவ லர் லட்சுமணனை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்ட னர். அப்போது அவரிடம், குடிநீர் இன்றி தினம் அவதிப்படுகிறோம். பாது காக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். இதற்கு அதிகாரி, லாரிகள் மூலம்  தண்ணீர் விநியோகம் செய்யப்படும். மேலும் 50 அடி ஆழத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து இரண்டு நாட்களில் குடிநீர் விநி யோகம் செய்கிறோம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து லட்சுமணனிடம்,  தனியார் நிறுவனங்கள் சட்ட விரோத மாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றியப் பொருளாளர் ஏ.செல்வி தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் இ.மோகனா, துணை நிர்வாகி கள் லட்சுமி, விமலா, ரேணுகா, சுமதி, அகஸ்டின், பாரி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.