tamilnadu

img

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை - காவல் அதிகாரிகள் விசாரணை

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தனியார் பள்ளியில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. திருத்தணி அருகே தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம், முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா( 17 ). இவர் திருவள்ளூர் அருகே உள்ள கீழச்சேரி ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் புனித இருதய மகளிர் மேல் பள்ளி விடுதியில் தங்கி படித்து பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சக தோழிகள் உணவு அருந்த சென்ற பின் மாணவி சரளா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இந்நிலையில் காஞ்சிபுரம் டிஐஜி சத்தியப்பிரியா, மாவட்ட எஸ்.பி கல்யாண், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வக்குமாரும் மாணவியின் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.