tamilnadu

img

அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு அடையாள அட்டை வழங்க கோரிக்கை

திருவள்ளூர், செப். 14- தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (டியூஜெ) திருவள்ளூர் மாவட்ட கூட்டம் வெள்ளியன்று (செப்-13) செங்குன்றத்தில் நடைபெற்றது. டியூஜெ மாவட்ட தலைவர் ஆர்.முரு கக்கனி தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் பெ.ரூபன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் வி.பி.கோவிந்தராஜ் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் மாநில தலை வர் பி.எஸ்.டி.புருஷோத்தமன், மாநில இணைச் செயலாளர் கி.மணிவாசகம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
தீர்மானங்கள்
மாவட்ட மற்றும் பகுதி அளவில் பணி யாற்றும் அனைத்து செய்தியாளர்களுக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும், ஓய்வூ தியம் பெறுவதில் உள்ள சட்ட வழிமுறை களை எளிமைப் படுத்த வேண்டும், மாநகர பேருந்துகளிலும் இலவச பேருந்து அட்டை  வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.