தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் உளுந்தூர்பேட்டையில் அருந்ததியர் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ஆடைகள் வழங்கப்பட்டன. இதில் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.ராஜா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, தமுஎகச மாவட்ட நிர்வாகி பி.ஸ்டாலின், க.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.