தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று (ஜூன் 2) ரத்ததான முகாம் நடைபெற்றது.சங்கத்தின் பெரியபாளையம் பகுதி தலைவர் இ.திருமலை தலைமை தாங்கினார். இதில் மாவட்டத் தலைவர் டி.மதன், மாவட்டச் செயலாளர் எஸ்.தேவா, பொருளாளர் எஸ். கலையரசன், மாவட்டத் துணைத் தலைவர் டி.சண்முகசுந்தரம், பகுதி செயலாளர் ஆர்.கே.மதன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி, என்.கங்காதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர் விஷ்வபிரியா தலைமையில் வந்த மருத்துவ குழுவினர் 25க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரத்தத்தை சேகரித்தனர்.