tamilnadu

img

சவுடு மண் கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவள்ளூர், ஜூலை 25 -  பொன்னேரி பகுதியில் சவுடு மண்  கொள்ளையடிப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கிராம  மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் வன்னிப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஏரியில் பாஜக பிரமுகர் ரமேஷ் என்பவர் 2 ஜெசிபி இயந்திரங்களை வைத்து திருட்டுத்தனமாக சவுடு மண் எடுத்து வருகிறார். ஏரிப் படுகையில் உள்ள சவுடு  மண்ணை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு டிராக்டர்கள் மூலம் தங்கு தடையின்றி எடுத்து செல்கிறார். அதிக அளவு ஆழம் மண் எடுப்ப தால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்  பாதிக்கும். மேலும் ஏரிக் கரைகளும் உடைந்து கடும் சேதம் ஏற்படும் அபா யம் உள்ளது. இது தொடர்பாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் பொன் னேரி பகுதிச் செயலாளர் கே.சதீஷ், கிளை நிர்வாகிகள் விஜய், சூரியா  ஆகியோர் கூறும்போது, கொரோனா  காலத்தில் இயற்கை வளங்கள்  தொடர்ந்து கொள்ளையடிக்கப்படு கிறது. இதனை அதிகாரிகள் கண்டு  கொள்வதில்லை. குறிப்பாக சின்ன  ஏரியில் மண் கொள்ளையடிக்கப் படுகிறது எனறு தகவல் கொடுத்த  பிறகும் வருவாய் ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலரும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக பிரமுகர் என்பதால் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர் என்றனர். அரசு, ஏரியை தூர்வாரி கரையை  பலப்படுத்த வேண்டும். விவசா யத்தை பாதிக்கும் சவுடு மண் கொள்ளை மாவட்ட ஆட்சியராவது தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலி யுறுத்தனர்.