tamilnadu

img

எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியை பயனுள்ள முறையில் செலவிட்டுள்ளேன் ஸ்ரீதேவி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் டி.கே.ஆர் பேச்சு

பொன்னேரி,மார்ச் 14-  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.   இந்த கல்லூரியின் 15வது  பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி செயலாளர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர். வி.லட்சுமிபதி வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை  உறுப்பினரும், மத்திய நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டு 343மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில் டாக்டர். ஆர்.சங்கீதா உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். அவர் பேசுகையில், மத்திய அரசு  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கும் நிதியை தனக்கான நிதியாகச் சிலர் கருதுகிறார்கள்.அது மக்களுடைய வரிப்பணமாகும். இந்த பணத்தைக் கொண்டு சென்னை முதல் குமரி  வரை, நாகப்பட்டினம் முதல் நீலகிரி வரையிலும் எல்லா மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி ஆகியவற்றின் கல்வி வளர்ச்சிக்காகச் செலவு செய்துள்ளேன். இப்படி இந்தியா முழுவதிலும் அதிகமாக மக்கள் சேவையைச் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளேன்.இது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் வரும் காலங்களில் நீங்களும் அரசியல்வாதியாக, விளையாட்டு வீரர்களாக, விஞ்ஞானிகளாக, பெரும் தொழில் நிறுவனங்களை உருவாக்குபவர்களாக வருவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.மேலும் நம் நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் உள்ளது. மக்களின் தேவைகளைப் பெற்றுத்தர மாணவர்கள் முன்வர வேண்டும். பல்வேறு மொழி, சாதி, கலாச்சாரம் கொண்டவர்கள். இவர்களை ஒற்றுமைப்படுத்தத் தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டும். பட்டமளிப்பு விழா என்பது வாழ்க்கையில் இன்னொரு துவக்கம். தொடர்ந்து படிப்பது நல்லது, காலத்துக்கு ஏற்ற விஞ்ஞானத்தையும் படியுங்கள். நவீன  இந்தியாவை உருவாக்குவோம் என்றார்.இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.