tamilnadu

img

தினசரி ஊதியமாக ரூ.600 வழங்குக

திருவள்ளூர், மே 12 -  துப்புரவு தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதிய மாக தினசரி 600 ரூபாய் வழங்க வலியுறுத்தி செவ்வா யன்று (மே 12) தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தூய்மை பணியாளர்க ளுக்கு முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், வைரஸ் தொற்  றால் சேலம், ஈரோட்டில் இறந்த துப்புரவு தொழிலாளி  குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், தமிழகம் முழு வதும் பணிபுரியும் ஒப்பந்த,  தினக்கூலி துப்புரவு பணி யாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், துப்புரவு  பணியாளர்களை காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மீஞ்சூர்
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத் தின் (சிஐடியு) சார்பில் மீஞ்சூர் பேரூராட்சி அலுவ லகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் பி. கதிர்வேலு தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர்  ஏ.ஜி. சந்தானம், சிஐடியு  மாவட்ட துணைச் செயலாளர் ஜி.விநாயகமூர்த்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ்குமார் உள் ளிட்டோர் பேசினர்.
செங்கல்பட்டு
உள்ளாட்சி ஊழியர்  சங்கத்தின் சார்பில் செங்  கற்பட்டு நகராட்சி அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் கணபதி தலைமை தாங்கி னர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இ.சங் கர், சங்கத்தின் மாவட்ட செயலாளர் சம்பத், மாநில குழு உறுப்பினர் டி. கோவிந்தன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.