tamilnadu

மரக்கடையில் தீ விபத்து

ஊத்துக்கோட்டை, ஜன.28- ஊத்துக்கோட்டை திரு வள்ளூர் ரோட்டில் செல்வ குமார் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் செவ்வா யன்று (ஜன.28) அதிகாலை  மரக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் கடை முழுவதும் தீ பரவியது. கடை யில் தூங்கிய தொழி லாளர்கள் அலறியடித்து வெளியே வந்ததால் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர், சத்தியவேடு, தேர்வாய் கண்டிகை ஆகிய பகுதிக ளில் இருந்து தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்த னர். எனினும் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், ரம்பங்கள், மரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின.இது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;