tamilnadu

பழவேற்காட்டில் மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு

திருவள்ளூர், மே 11- பழவேற்காடு மீனவர்க ளின் மீன்பிடி வலைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு திருமலை நகர் மீனவ கிராமத்தில் நள்ளி ரவில் மீனவர்களது மீன்பிடி வலைகளுக்கு மர்ம நபர்கள்  தீ வைத்துள்ளனர். இதில்  50க்கும் மேற்பட்ட மீனவர்க ளின் மீன்பிடி வலைகள் முற்றி லும் எரிந்து நாசமானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மீனவர் ஒருவரது மீன்பிடி வலைக்கு தீவைக்கப்பட்டது. அதே போல் தற்போதும் தீ வைப்பு  சம்பவம் நடைபெற்றுள்ளது. ஊரடங்கால் கடந்த 45 நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில் மீன்பிடி வலைகள் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என்று கூறப்  படுகிறது. இதனால்  மீன வர்கள் வேதனையில் ஆழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  திருப்பாலைவனம் காவல் துறை  வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்துகிறது.

;