tamilnadu

img

கொலை, கொள்ளையை தடுக்காத பொன்னேரி காவல்துறைக்கு கண்டனம்

திருவள்ளூர், செப்.25-  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொள்ளை வழிப்பறி சம்பவங்கள் நடை பெறுகிறது.  தடப்பெரும்பா க்கத்தில் செயின் பறிப்பு,  கடைகளை உடைத்து கொள்ளை,  பாலாஜி நகர்,  தசரத நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதியின் வீடுக ளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று ள்ளது. மேலும், ரெட்டிப்பாளை யம், கொளத்தூர், மணப்புரம் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில்  வேலை முடித்து விட்டு வருபவர்களிடம் சமூக விரோதிகள் வழி மறித்து நகை, பணம், கைபேசி போன்றவற்றை  பறித்துச் செல்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ள னர். ஆனால் காவல்துறை யினர் நடவடிக்கை  எடுக்கா வில்லை. இதனால் ஆத்திர மடைந்த ரெட்டிபாளையம் கிராம மக்கள் காவல்துறையை கண்டித்து அரசுப் பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,  வழிப்பறி சம்பவங்களை தடுக்க வேண்டும், கூடுதல் காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும், பணம், நகை போன்ற பொருட்களை  கண்டுபிடித்து உரியவர்க ளிடம் வழங்க வேண்டும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  பொன்னேரியில் செவ்வாயன்று (செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொன்னேரி பகுதிச் செயலாளர் இ.தவமணி தலைமை தாங்கினார். இதில் சட்ட மன்ற முன்னாள் உறுப்பி னர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.செல்வராஜ், கே.விஜயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், என்.ரமேஷ்குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் மதன், நாகராஜ், சேகர், காளமேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.