எல்ஐசி-யை தனியார் மயமாக்கும் பாஜக-வின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து பொன்னேரியில் செவ்வாயன்று (பிப்,4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மோகன்ராவ், வாசுதேவன், கே.விஜயன் உட்பட அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
**************
பீகார் மாநில மின் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் அண்ணாநகர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே மேற்கு கிளைத் தலைவர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் தலைமையில் செவ்வாயன்று (பிப். 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், மேற்கு கிளைச் செயலாளர் எஸ்.தசரதன், கே.ராஜேந்திரன் (தொமுச), வெங்கடேசன் (கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்), பார்த்தசாரதி (மின் பொறியாளர் அமைப்பு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.