திருவள்ளூர், ஆக. 25 - எல்ஐசி-யில் பொது மக்களின் சேமிப்பை சுரண்டும் தனியார் நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.25) பொன்னேரியில் அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஃகிளப் மெடிக்கிளைம் குளறுபடிகளை நீக்கி உடனே அடையாள அட்டை வழங்க வேண்டும், கொரோனா கால நிவாரணமாக ஒரு மாத ரெனிவல் கமிஷனை வழங்க வேண்டும், பாலிசி சேவைகளுக்கு அக்னா லெட்ஜ்மெண்ட் வழங்க வேண்டும், எல்ஐசி-யை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை கைவிட வேண்டும், முகவர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கேரளாவைப் போல முகவர்க ளுக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பொன்னேரி எல்ஐசி கிளை அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் சுரேஷ் பாபு தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், கோட்டத் தலைவர் நாகலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். இதேபோன்று கும்மிடிப்பூண்டி, திரு வள்ளூர் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. அதில் சங்க நிர்வாகிகள் சி.ஆறுமுகம், செல்வகுமார், தங்கவேல், அண்ணாமலை, ஜெயக்குமார், ஸ்ரீதர், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.