tamilnadu

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை

 திருவள்ளூர், பிப்.29-  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் இடைத்தரகர்கள் மூலம்  முறைகேடுகள் நடைபெறுவதாக  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சிவபாதம் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட போக்குவரத்து சோதனைச் சாவடி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.