திருவள்ளூர், அக்.24- திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (45). இவரது தம்பி கார்த்திக் (35). அதே கிராமத்தை சேர்ந்தவர் மணி (60). இவர்கள் அனை வரும் விவசாய கூலி தொழி லாளர்கள். இந்நிலையில் வியா ழனன்று (அக்.24) காலை இவர்கள், அதே கிரா மத்தைச் சேர்ந்த மேலும் 6 பேருடன் தலக்காஞ்சேரியில் நடைபெறும் வயல்வெளி பணிக்காக ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை பிரபு என்பவர் ஓட்டினார். திருப்பாச்சூர் அருகே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் வந்த போது, ஊத்துக்கோட்டை யில் இருந்து சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு ஆட்கள் ஏற்றிச் சென்ற பேருந்து திடீ ரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முற்றிலுமாக நசுங்கியது. அதில் பயணம் செய்த கார்த்தி, வேலு, மணி, சங்கர் ஆகியோர் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பரி தாபமாக இறந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட னர். படுகாயம் அடைந்த வர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து திருவள்ளூர் தாலுக்காக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.