திருவள்ளுவரை இழிவுபடுத்திய விவகாரம்
சென்னை, நவ.4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- தஞ்சாவூர் மாவட்டம்பிள்ளை யார்பட்டி பகுதியில்பிரதான சாலை யில் திருவள்ளுவர் சிலை அமைக்க ப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைக்க ப்பட்டு சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்துவரு கிறது. இந்த நிலையில், சமூக விரோதிகள் திருவள்ளுவர் சிலையின் கண்ணை கறுப்பு பேப்பரை வைத்து கட்டியுள்ளனர். மேலும், முகத்தில் சாணத்தைப் பூசி அவமதிப்பு செய்துள்ளனர்.
இன்றளவும் உலக இலக்கியவாதி களையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் இரண்டு அடிகளில் பொருள்பொதிந்த, அழகியலுடன் கூடிய பாடல்களைக் கொண்ட திருக்குறளை நமக்குத் தந்தவர் திருவள்ளுவர். நீதி நூலான திருக்குறள் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துப் பகுதி மக்களின் உலகப்பொதுமறையாக கொண்டாட ப்படுகிறது. அத்தகைய திருக்குறளை எழுதியதன் மூலம் அன்னைத் தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்திய வர் திருவள்ளுவர். இத்தகைய பெருமைக்குரிய திருவள்ளுவரின் சிலையை அவமதித்த சமூக விரோதிகளின் இழிவான செயலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. விரைவான நடவடிக்கைகள் மூலம் அக்கும்பலை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
அது போல, திருக்குறளின் 1330 பாடல்களில் எந்த இடத்திலும் குறிப்பிட்ட ஒரு மதத்தின் கடவுள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை. ஆகவேதான் மதங்களைக் கடந்தும் உலக மக்களால் அவர் கொண்டாடப்படு கிறார். இந்நிலையில், அவரை ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் அடைக்கும் வகையில் சங்பரிவார் அமைப்புகள் தங்கள் சமூக வலைத்தள பதிவுகளில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தில் அவரது உடைக்கு காவி வண்ணம் பூசியும், திருநீறு பூசியும் இழிவு படுத்தியுள்ளனர். இத்தகைய நடவடிக்கை தமிழ்ச் சமூகத்தால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாகும். எனவே இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் சங்பரி வார் கும்பலை உடனடியாக கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.