tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல்களை குறிவைக்கும் கேரள அரசியல்.. நீளும் விசாரணைகளும்; மர்மமான தலையீடுகளும்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.சிவசங்கரும் பெங்களூரில் பினீஷ்கொடியேரியும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல்களின் முக்கியத்துவம் மத்திய விசாரணைஅமைப்புகளை அரசியல்மயமாக்குவதாக கேரள சமூகத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. மர்மமான அரசியல் தலையீடுகளும் மக்கள் மத்தியில் அம்பலமாகி வருகின்றன. 

தங்கக் கடத்தல் வழக்கிலும், பெங்களூரில் நிதி தொடர்பான விவகாரத்திலும் ஒரே ஏஜென்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் வழக்கத்திற்குமாறானவை. இதில் அமலாக்கத்துறையின் (இ.டி) நடவடிக்கை இரட்டை முகம்கொண்டதாக உள்ளது. அதன் பின்னணியில் உள்ள ஒரே நோக்கம் கேரள அரசையும் சிபிஎம்-ஐயும் அவதூறு செய்ய உதவுவது என்பதாகும்.தூதரக பார்சல்கள் மூலம் தங்கம்கடத்தல் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பயங்கரவாத தொடர்புகள் குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது. அந்நிய செலாவணி மற்றும் பணமோசடி ஆகியவை அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்பட்டது. அதையெல்லாம்கடந்த இ.டி-யின் நடவடிக்கை சந்தேகத்திற்குரியது. நாடு முழுவதும் பலவிமான நிலையங்கள், துறைமுகங் களில் தங்கம் உள்ளிட்டவற்றில் வரிஏய்ப்பு நடப்பது பொதுவானது. இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பின்தொடர்ந்துதேடிய வரலாறு அமலாக்கத்துறையில் இல்லை.

கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புபணம் பறிமுதல் செய்யப்பட்ட சந்தர்ப் பங்களில் கூட, அமலாக்கத்துறையின் தொடர் விசாரணை பலவீனமாக உள்ளது. அந்நிய செலாவணி மீறல் தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவித்துள் ளன. கேரள காவல்துறையினர் பறிமுதல் செய்து இ.டி யிடம் ஒப்படைத்த பண மோசடி வழக்குகளில் நிலைமை வேறுபட்டதல்ல. இந்தச் சூழலில்தான் சுங்கத்துறையையும், என்ஐஏ-வையும்  பின்னுக்கு தள்ளி துதரக பார்சல்களில் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கான நகர்வுஉள்ளது.பெங்களூரில் போதைப்பொருள் வழக்கை போதைப்பொருள் கட்டுப் பாட்டு பணியகம் (என்சிபி) விசாரித்து வருகிறது. திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரில், தனக்குஅறிமுகமானவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கடன் கொடுத்ததாக பினீஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பணத்தின் ஆதாரம் உறுதி செய்யப்பட்டால், வழக்கு அங்கேயே முடிவடையும். அப்படி ஒரு வாய்ப்பைஇ.டிஅளிக்கவில்லை. போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் என்சிபி,இதுவரை பினீஷை விசாரிக்கவில்லை அல்லது விசாரணையில் சேர்க்கவில்லை.

அதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில்இதுவரை, பயங்கரவாத தொடர்புகள் இருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் என்ஐஏ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை. தங்கக் கடத்தலில் எம்.சிவசங்கருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதாக சுங்கத்துறை குற்றம் சாட்டவில்லை. என்ஐஏ வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. யுஏபிஏ (உபா) சட்டம் யார் மீதும் சுமத்தப்படவில்லை. என்ஐஏ-யையும் சுங்கத்துறையையும் மீறி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னணியில் காங்கிரசும் பாஜகவும் உள்ளன.

சிவசங்கரின் தொலைபேசி அழைப்பு 
தங்கக் கடத்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பு எம்.சிவசங்கர் சுங்க அதிகாரி ஒருவரை அழைத்துள்ளார். பல மாதங்கள் கழித்து நடக்கவிருக்கும் ஒரு குற்றத்திற்கு இது ஒரு முன்னோடி என்ற வாதம் விசித்திரமானது. விவாதத்துக்குரிய வங்கி லாக்கர் நடவடிக்கையும் தங்கக் கடத்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே வருகிறது. பின்னர் நடந்ததங்க கடத்தலுக்கான கமிஷன் என்கிற கூற்று பொருத்தமற்றது.ஒரு அதிகாரியின் தவறை அரசாங்கத்தின் தலையில் சுமத்தக்கூடாது என சிவசங்கர் பிரச்சனையில் முதலமைச்சரும், பினீஷ் ஏதேனும் தவறுசெய்திருந்தால் அவர் தண்டிக்கப்படட்டும் என்று கொடியேரி பாலகிருஷ் ணனும் தெரிவித்துள்ளனர். எத்தகைய வலைப் பின்னலும் முதலமைச்சர் அலுவலகத்தை எட்டவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் பதற்றத்துக்கு காரணம். உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள்வரை குற்றச்சாட்டுகளின் புகைமூட் டத்தை பராமரிப்பதே யுடிஎப் மற்றும் பாஜகவின் நோக்கம்.