திருவண்ணாமலை, பிப். 11- திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் வழி யாக சிலர் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கால்வாயில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, திரு வண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு தக வல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, கால்வாயில் இறந்து கிடந் தது யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.