tamilnadu

img

தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

நலவாரிய பதிவுபெற்ற தொழிலாளர்களின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி தலைமை தாங்கினார், நிர்வாகிகள் எம்.ரவி, சரவணன், காங்கேயன், எஸ்.ஆனந்தன், நாகராஜ், கமலக்கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூரிலும் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.