திருவண்ணாமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் திருவண்ணாமலை மற்றும் ஜமுனாமரத்தூர் இணைந்து நடத்திய 3 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.