கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 65 லட்சம் முறைகேடு
திருவண்ணாமலை, ஆக. 14- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கடன் தள்ளுபடி செய்த வகையில் ரூ.65 லட்சம் முறை கேடு நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டு, அந்த முறை கேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வரு கிறது. சேவூர், அடையபுலம், முள்ளிப்பட்டு, இரும்பேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயி கள் நகைக்கடன், விவசாயக் கடன், பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற்று வந்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதை விவசாயிகளுக்கு தெரிவிக்காமல் ரூ. 65 லட்சத்தை சங்கச் செய லாளர் மற்றும் காசாளர் இணைந்து மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு சங்க துணைப்பதிவாளருக்கு விவ சாயிகள் மற்றும் மகளிர் குழுவினர் புகாரளித்தனர். அதன் பேரில் கள அலுவலர் ரவிச்சந்திரன் கடந்த ஒரு வாரமாக ஆவணங்களை சரி பார்த்து விசாரித்து வருகிறார். இதில், தள்ளுபடி செய்யப்பட்ட தொகை குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தாமல், அவர்களிடம் இருந்து பணம் வசூ லித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து மற்ற கிராமங்களில் உள்ள சில விவ சாயிகள் வங்கிக்கு வந்து விசாரித்தனர். அப்போது விவசாயி கள் செலுத்திய ரூ.20 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். இதையறிந்த மற்ற விவசாயிகளும் வங்கிக்கு வரத் தொடங்கி னர். அவர்களிம் உண்மையை கூறாமல் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த மோசடிகள் குறித்து, அப்போது சங்கத்தில் பணியில் இருந்த செயலாளர் மற்றும் காசாளர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குடிநீருக்காக தூக்கத்தை இழந்து தவிக்கும் மக்கள்
வேலூர், ஆக. 14-குரும்பேரி கிராமத்தில் விநியோகிக்கப்படும் 2 குடம் குடிநீருக்காக தினசரி நள்ளிரவிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்ப்பட்டது குரும்பேரி ஊராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கடும் வறட்சியால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு போயுள்ளதால் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை. இந்த கிராமத்தின் கிழக்கு வீதி பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அரை மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்திற்கு 2, 3 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. மேலும் இந்த இரண்டு குடம் தண்ணீருக்காக தூக்கத்தை இழந்து நள்ளிரவில் பிடிக்க வேண்டியுள்ளது. எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.