tamilnadu

திருவண்ணாமலை, புதுச்சேரி முக்கிய செய்திகள்

திருவண்ணாமலையில் முதுகெலும்பு மறுவாழ்வு மையம்                                                                                                                                                                                                                                                                                           திருவண்ணாமலை, டிச. 14- திருவண்ணாமலை நகராட்சி செங்கம் சாலையில் அமைந்துள்ள பழைய அரசு மருத்துவமனை வளா கத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆன்மா தொண்டு நிறு வனம் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த முது கெலும்பு மறுவாழ்வு மையம் அமைப்பதற்கான புதுப்பிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி தொடங்கி வைத்தார். இந்த மையம் முதுகு தண்டு வடம் பாதித்தவர்களுக்கு குறுகிய காலம் தங்கும் மையமாக அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் 60 முதல் 70 நபர்கள் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அடுத்தவர்களின் உதவி யுடன்தான் எந்த பணிகளையும் செய்ய முடியும். இம்மையம் மூலம்  முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் ஆன்மா தொண்டு நிறு வனத்தின் இணை நிறுவனர் பிரீத்தி  சீனிவாசன், மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

கடலில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்
புதுச்சேரி, டிச. 14- வேலூரில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வாலிபர் கடலில் மூழ்கினார். அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் ராணிப்பேட்டையில் இருந்து சூர்யா (18), விஜய் (19), நேதாஜி, விஜி, கோவர்த்தனன் உள்ளிட்ட 13 பேர் புதுச்சேரிக்கு சனிக்கிழமை (டிச-14) சுற்றுலா வந்தனர். இதில் 5 பேர் கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறம் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அங்கு குளித்த வாலிபர்கள் கடலில் முழ்கி தத்தளித்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 4 பேரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் கோவர்த்தனன் என்ற வாலிபரை மட்டும் மீட்க முடியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.