tamilnadu

img

நான்கு நாட்கள் தொடர்ந்த கரும்பு விவசாயிகள் போராட்டம் வெற்றி

திருவண்ணாமலை, பிப். 27- திருவண்ணாமலை தரணி சர்க்கரை அலை நிர்வாகம், கரும்பு விவசாயி களுக்கு வழங்காமல், ரூ.26 கோடி  பாக்கி வைத்துள்ளது. அந்த பணத்தை,  வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதியில்  இருந்து 31ஆம் தேதிக்குள் படிப்படி யாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவர்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கரைப்பூண்டியில் உள்ள  தரணி சர்க்கரை ஆலை அமைந்துள் ளது. கடந்த வருடம் அரைவைப் பரு வத்திற்கான விவசாயிகளுக்குத் தர வேண்டிய 26 கோடி ரூபாய் பணத்தைத்  வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில், கரும்பு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளர் டி.ரவீந்திரன் தலைமையில், போளூர் தரணி சர்க்கரை ஆலை முன்பு  கடந்த 24ஆம் தேதி முதல் காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை (பிப். 27) மாவட்ட ஆட்சியர், சங்க பிரதி நிதிகள், ஆலை நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் இதுகுறித்து டி.ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரும்பு விவசாயிகளுக்கு அலை நிர்வாகம் வழங்க வேண்டிய பாக்கி  பணத்தை வரும் மார்ச் 15 தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் படிப்படி யாக வழங்கிவிடுவதாக ஆலை நிர்வாகி கள் உறுதியளித்தனர், நிகழும் 2019 – 20  பருவத்திற்கான கரும்பை, தரணி ஆலை  அரவை செய்ய முடியாத நிலை உள்ள தால், விவாசாயிகளிடமுள்ள 10 ஆயி ரம் டன் கரும்பை செய்யாறு கூட்டறவு சர்க்கரை ஆலையிலும், 40 ஆயிரம் டன் கரும்பை, தண்டராம்பட்டு பன்னாரி  சர்க்கரை ஆலையிலும் அரைவை  செய்ய ஆட்சியர் திட்டமிட்டுள்ளதாவும், அதற்கான லாரி வாடகையை அந்தந்த  ஆலைகளே ஏற்றுக் கொள்ளும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தரணி ஆலை கரும்புக்காக, விவசாயிகள் வாங்கியுள்ள பயிர்க் கடன் வட்டியில் ஒரு பகுதியை தள்ளு படி செய்ய நடவடிக்கை எடுப்பதாக வும், வங்கி கடனுக்காக விவசாயிகளி டம் கெடுபிடி செய்யக்கூடாது எனவும்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இதில் மாவட்டச் செயலாளர் வி. சுப்பிரமணி, தலைவர் டி.கே.வெங்கடே சன், பொருளாளர் உதயகுமார், ஆலை  மட்ட செயலாளர் கே. பாலமுருகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, நிர்வாகி பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.