திருப்பூர், ஜூன் 5-திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற தால் விரக்தி அடைந்து தற் கொலை செய்து கொண்டார்.திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதியரின் மகள் ரிதுஸ்ரீ. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இம்மாணவி 10ஆம் வகுப்பில் 461 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 490 மதிப்பெண்களும் எடுத்தார். இந்நிலையில மருத்துவம் படிப்பதற்கான நீட் தகுதித் தேர்வு எழுதினார். புதன்கிழமை நீட் தேர்வு முடிவு வெளி வந்தது. இதில் ரிதுஸ்ரீ குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரிதுஸ்ரீ புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரிதுஸ்ரீ உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.திருப்பூரில் நீட் தேர்வில் தோல்வி காரணமாக விரக்தி அடைந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.