டாக்ஸி பெர்மிட் இல்லாத வாகனங்கள் மீது ஆர்டிஓ நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர டாக்ஸி தொழிலாளர்கள் இடையே மோதல் போக்கை உருவாக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.கேசவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் டி.குப்புசாமி துவக்கிவைத்தார். மாவட்டச் செயலாளர் பிரபாகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநிலச் செயலாளர் பூபதி நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், தலைவர் எம்பி.ராமச்சந்திரன், துணைத்தலைவர் என்.காசிநாதன், சாலை போக்குவரத்து மாவட்ட நிர்வாகிகள் மணி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.