திருவண்ணாமலை, ஜுலை 6- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக் குடங் களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலசப்பாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூரில் உள்ள குயவர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஆழ் துளைக் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வறட்சி காரண மாக நிலத்தடி நீர்மட்டம் வெகு வாக குறைந்து விட்டதால், போதுமான அளவு தண்ணீர் எடுக்க முடியவில்லை. இத னால், கடந்த 10 நாட்களாக குயவர் தெரு மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறை யிட்டும், எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இத னால் ஆத்திரமடைந்த குய வர் தெரு பகுதி மக்கள் குடி நீர் கேட்டு போளூர்-வீரளூர் சாலையில் காலிக் குடங்களு டன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உள் ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடி யாக குடிநீர் கிடைக்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அதேபோல், திரு வண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அய்யம்பாளையம் கிரா மத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயை துண்டித்து சிலர் குடிநீர் பிடித்துள்ளனர். இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் செல் லாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அய்யம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசன், உதவி செயற்பொறியாளர் பத்ம நாபன் ஆகியோர் முற்றுகை யில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட கார ணமாக உள்ள நபர்களின் குழாய் இணைப்பை துண்டித்தும், ஆழ்துளை கிணறு அருகிலேயே சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.