tamilnadu

img

திருவண்ணாமலையில் நிலைகொண்ட புயல்... பலத்த காற்றுடன் மழை....

திருவண்ணாமலை:
நிவர் புயல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள நிலையில், ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பி, விவசாய நிலங்களுக் குள் தண்ணீர் புகுந்து அறுவடைக்கு தயராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.ஆரணியில் மரம் முறிந்து கூரை வீடு மீது விழுந்து சேதமடைந்தது. மின் கம்பங்கள் உடைந்ததால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.வந்தவாசியில்  112 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மரம் வேரோடு சாய்ந்தது. மரம் விழுந்து கிடந்ததால், சாலையோரமாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

;