tamilnadu

img

பலத்த மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மறியல்

திருவண்ணாமலை, அக்.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.  செங்கம் சாலை, தாமரை நகர், காந்திநகர் பைபாஸ் சாலை, தேனிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், தாழ்வான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்  குள்ளாகினர். கழிவுநீர்க் கால் வாய்களை சீரமைக்காமல் அலட்சியமாக நிர்வாகம்   செயல்பட்டது காரணமாகவே,   மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வரும் பருவ மழை காலங்களில், மழை நீர் வீடுகளுக்குள் புகாமல்  இருப்பதற்கு, கால்வாய் களை உடனடியாக சீரமைக்க  வேண்டும் என்று வலியு றுத்தி,  பொதுமக்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.  தாமரை நகர், வேட்டவலம் சாலை பகுதிகளில்  பொது மக்கள்  மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர்.