tamilnadu

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை, டிச.4- திருவண்ணாமலை தீபவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு, வேலூர், விழுப்பு ரம், கடலூரிலிருந்து 9, 10, 11 மற்றும் 12 ஆம்  தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கிறது. திருவண்ணாமலை தீபவிழா நடந்து  வருகிறது. வரும் 10 ஆம் தேதி  தீபம்  ஏற்றப்படுகிறது. தீப விழாவிற்கு,  தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்காக மக்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். இதையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர், விழுப்புரம், கடலூரில் இருந்து 9, 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-  விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 10 மற்றும் 11 ஆம் தேதி காலை  9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்க டேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக் கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை ரயில் நிலையங்கள் வழி யாக திருவண்ணாமலைக்கு முற்பகல் 11  மணிக்கு வந்தடையும். பின்னர், திருவண்ணா மலையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்ப டும் ரயில், இதே வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரத்திற்கு மதியம் 3 மணிக்கு  சென்றடையும். விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 9, 10  மற்றும் 11 ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு  புறப்படும் சிறப்பு ரயில் திருவண்ணா மலைக்கு இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் திருவண்ணாமலையில் இருந்து 10, 11 மற்றும் 12 ஆம்தேதி அதிகாலை 3.15  மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழி யாகவே மீண்டும் விழுப்புரத்துக்கு அதி காலை 5 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 மற்றும் 10 ஆம்  தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு  ரயில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்பு ரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்  கோவிலூர் ரயில் நிலையங்கள் வழியாக  திருவண்ணாமலைக்கு இரவு 11.08 மணிக்கு  வந்தடைகிறது. பின்னர், திருவண்ணா மலையில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்  பட்டு போளூர், ஆரணி சாலை வழியாக  வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலை யத்தை நள்ளிரவு 1 மணிக்கு சென்றடை கிறது. வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலை யத்தில் 10 மற்றும் 11 ஆம் தேதி அதிகாலை 1.30  மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆரணி சாலை, போளூர் ரயில் நிலையம் வழியாக திரு வண்ணாமலைக்கு அதிகாலை 3.02 மணிக்கு  வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து அதி காலை 3.04 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்த டம் வழியாகவே சென்று கடலூர் திருப்பாதிரி புலியூருக்கு காலை 5.55 மணிக்கு சென்றடை கிறது. மறுபுறம், வேலூர் கன்டோன்மென்ட் ரயில்  நிலையத்திலிருந்து 9, 10 மற்றும் 11 ஆம் தேதி  இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி  சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சா புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு  11.25 மணிக்கு வந்தடைகிறது.  பின்னர் திரு வண்ணாமலையில் இருந்து 10, 11 மற்றும் 12ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப் பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும்  வேலூருக்கு காலை 5.55 மணிக்கு சென்றடை கிறது. ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 10 ஆம் தேதி அதிகாலை  5.22 மணிக்கு நிறுத்தப்பட்டு, 5.23 மணிக்கு புறப்பட்டு செல்லும்.  இதேபோல் புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் திருவண்ணா மலை ரயில் நிலையத்தில் 11 ஆம் தேதி மதி யம் 2.48 மணிக்கு நிறுத்தப்பட்டு, 2.49 மணிக்கு  புறப்பட்டு செல்லும் இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.