தி.மலை, செப்.22- திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் தச்சம்பட்டு சாலையில் அரசு பெண்கள் விடுதி, கோவில் தெரு, தெற்கு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமான தெருக்கள் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீடு களில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதியடைந்தனர். மழை நீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை யில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணாபுரம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மழை நீர் செல்லும் கால்வாய் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வெளியே செல்லவில்லை. தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீரை உடனே அகற்ற கோரிக்கை விடுத்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தண்ணீர் செல்ல நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்