குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய கருப்புச் சட்டங்களை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை ஈத்கா மைதானம் அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.