திருவண்ணாமலை, ஜூலை 20- ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. சங்கத்தின் 3ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் அருண்பாட்சா தலைமையில் சனிக்கிழமை (ஜூலை 20) திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஜி.சோணாசலம் வர வேற்றார். வருவாய்துறை ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.பாரி மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். செயலாளர் சி.சுப்பிரமணி வேலை அறிக்கையை யும், பொருளாளர் ஆனந்தன் வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஜெ.ராஜா, ஆர்.கருணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து தமுஎகச மாநில துணை பொதுச் செயலா ளர் எஸ்.கருணா உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் இரா.ஜோதி நிறைவுரையாற்றி னார். பி.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். புதிய தலைவராக அ.அருண்பாட்சா, செயலாள ராக சி.சுப்பிரமணி, பொருளாளராக அ.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக உரு வாக்கப்பட்டுள்ள தாலுக்கா தலைநகரங்களில் மாநில வங்கி கிளைகளை ஏற்படுத்த வேண்டும், சார் நிலை கருவூல அலுவலகம் அமைக்க வேண்டும், சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தால் அதிக அளவில் விவசாய நிலங்கள் மற்றும் வனங்கள் பாதிக்கப்படுவ தால் அதை கைவிட வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்குவதை போல ஓய்வூதி யர்களுக்கும் மருத்துவப்படி வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.