திருவண்ணாமலை, அக். 23- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ந.சிவ சங்கரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் மீனாட்சி வரவேற்றார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் நா. முத்து வேலன், வட்டப் பொருளாளர் பாபு, ஆசிரி யர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் கலை யரசன், மாவட்ட இணை செயலாளர் க.ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொரு ளாளர் மு. பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். ஒன்றியப் பொருளாளர் தமிழ்மலர் நன்றி கூறினார்.