திருவண்ணாமலை காஞ்சி சாலையில் உள்ளது தேவனந்தல். இந்த கிராமத்தின் வயல்வெளியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் கடந்த 6 ஆண்டுகளாக மின் கம்பிகள் ஐந்தடி உயரத்திற்கும் குறைவான உயரத்தில் செல்வதால் விவசாய பணிகளுக்காக கிராம மக்கள் செல்லும்போது விபத்தில் சிக்கும் அபாயமுள்ளது. கம்பிகளில் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து, பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. உயிர் சேதம் ஏற்படும் முன், இந்த மின்கம்பிகளை போர்க்கால அடிப்படையில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.